districts

img

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருப்பூர், ஜன.31- உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட  ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் புதனன்று உடுமலைப்பேட்டை வட் டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண் டார். அரசின் அனைத்து நலத்திட்டங்கள் சேவைகள் தங்குத டையின்றி மக்களுக்கு விரைந்து சென்றடைவதை உறுதி செய்திடும் நோக்கத்துடன் உங்களைத் தேடி உங்கள்  ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அறி வித்தார். இத்திட்டம் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரு கிறது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட  அளவிலான அலுவலர்கள் புதனன்று உடுமலைப்பேட்டை வட்டத்தில் அரசுதுறைகளின் மூலம் செயல்படுத்தி வரும்  திட்டங்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றின் செயல்பா டுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளில், மாநகர துணை காவல் ஆணையர்  அபிஷேக் குப்தா, மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார்  மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி,  உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த்  கண்னண், உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், உடுமலைப் பேட்டை நகர் மன்றத்தலைவர் மத்தின் மற்றும் அனைத்துத் துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.